திடீர் துகையல் பொடி by Velammal Gurusamy
ஒரு கப் மிளகாய் வத்தல் ,
அன்றாட அவசர உலகில் எவ்வளவோ
திடீர் திடீர் பொருட்கள் வந்துவிட்டன
உணவை சேர்த்துதான் சொல்கின்றேன்
அந்த திடீர் உணவு வகைகளை கடைகளில்
வாங்கி செய்து ருசிப்பதை விட அவற்றை
நாமே வீட்டில் தயார் செய்து வைத்துக்கொண்டால்
பயமின்றி உபயோகப்படுத்தலாம்
ஒரு துகையல் அரைக்க வேண்டும் என்றால்
உடனே , அதற்க்கு வேண்டிய பொருட்களை
வறுத்து மிசியில் அரைத்து செய்யவேண்டும்.
மின்சாரம் தட்டுப்பாடாக இருக்கும் காலமிது
காஸ் சிலிண்டர் 12லிருந்து 9 ஆகா குறைக்கப்பட்ட
காலம் .
ஒரு கப் மிளகாய் வத்தல் ,
ஒரு கப் தோலோடு உடைத்த உளுத்தம் பருப்பு ,
ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு ,
ஒரு டீஸ்பூன் பெருங்காயப்பொடி ,
ஒருகைப்பிடி கறிவேப்பிலை .
இவற்றை எண்ணெய் விட்டு நன்கு சிவக்க வறுத்து மிக்சியில்பொடித்து வைத்துக்கொள்ளுங்கள் .கொரகொரப்பாக இருந்தாலும் பரவாயில்லை .
இதை வைத்துக்கொண்டு நீங்கள் எந்ததுகையல் விரும்பினாலும்
பண்ணலாம்.
இதில் பலவிதங்கள் இருக்கு.
பூண்டு ,வெங்காயம் ,
இஞ்சி மஞ்சள் ,
மல்லி ,
புதினா ,
மேத்தி ,
கத்திரி,
காபேஜ்,
தக்காளி,
காரட்,
மாங்காய் தோல்,
சௌவ்சௌவ் தோல்
பீர்க்கங்காய் ஆரஞ்சு இவற்றிந்தோல் ,இவற்றையெல்லாம் எண்ணெய்
விட்டு வதக்கி ,தக்காளி தவிர மற்றதிற்கெல்லாம் புளிசேர்த்து அரைக்கவேண்டும் .சிலகாரமாகவும் சில இனிப்பாகவும் உள்ளவை .அதற்கு ஏற்றால்போல் பொடியின் அளவை கூட்டி குறைத்துக் கொள்ளலாம் .
முதலில் பொடியை குறைவாக போட்டு அரைத்து டேஸ்ட் பார்த்து விட்டு பிறகு பொடியின் அளவை கூட்டுங்கள் .
இன்னும் லெப்ட் ஓவர் சமைத்த காய்களிலும் பண்ணலாம்.
பண்ணும் முறை கரெக்ட்டாக வந்துவிட்டால் நீங்கள் தான் துகையல் சாம்ப்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி.
ரயில் மலை காடுபகுதியில் ஓடும்போது மட்டுமே கத்தும்
ஸ்டேஷன் அருகில் வந்தவுடன் சூப்பராக விசில் கொடுக்கும்.
ரயிலின் உள்ளிருப்பவர்களுக்கு ஊருக்கு வந்துவிட்டோம்
என்று சந்தோஷம். ஸ்டேஷனில் இருப்போருக்கு ஊருக்குபோக
ரயில் வந்ததில் சந்தோஷம்.
சந்தோஷம் உங்கள் செயலிலேயே இருக்கு .என்ஜாய் .
ஒரு துகையல் அரைக்க வேண்டும் என்றால்
உடனே , அதற்க்கு வேண்டிய பொருட்களை
வறுத்து மிசியில் அரைத்து செய்யவேண்டும்.
மின்சாரம் தட்டுப்பாடாக இருக்கும் காலமிது
காஸ் சிலிண்டர் 12லிருந்து 9 ஆகா குறைக்கப்பட்ட
காலம் .
இது போன்ற ஒரு பொடி நம் கைவசம் இருந்தால்
இவை கொஞ்சம் மிச்சப்பட வாய்ப்பு உள்ளது
நாமும் கொஞ்சம் செஞ்சுதான் பார்ப்போமே
No comments:
Post a Comment