கலர்புல் காராபூந்தி. by: velammaal Gurusamy
இதன் அடிப்படை பெயர் பூந்தி , இதில் காரம் சேர்த்தால்
காரா பூந்தி , இனிப்பு சேர்ந்தால் பூந்தி லட்டு
இனிப்பு பூந்தியை லட்டு செய்யலாம், பருப்பு தேங்காய்
கூடுகளில் அடைத்து திருமணங்கள், போன்ற சுப
காரியங்களுக்கு செய்தல்.
திருமணங்களில் இனிப்பு பூந்தியை பந்தியில் தூளாக
பரிமாறுவார்கள்
இதே பூந்தியில் காரம் சேர்த்து , காரா பூந்தி என்று
அழைக்கின்றோம்.
குளிர் காலத்தில் டீ டைம்முக்கு ஏற்ற கர கரப்பான காரம் இந்த சுவையான ஸ்னாக் காராபூந்தி இதை கலர்புல்லா அளித்திருக்கிறேன்.
எந்த பூந்தியாக இருந்தாலும் கண்டிப்பாக பூந்திக் கரண்டி வேண்டும்.
ஒரு கப் கடலை மாவிற்கு ஒரு டேபிள்ச்பூன் அரிசிமாவுஎடுத்துக்
கொண்டு அதோடு தேவையான உப்பு வத்தல்பொடி ,பெருங்காயப்
பொடி சேர்த்து,
பஜ்ஜி மாவு பதத்தைவிட சிறிது நீர்த்த பதமாக கரைத்து ,கடாயில் எண்ணெய்யை நன்கு காயவைத்து, பூந்தி கரண்டியை கடாய்க்கு
மேலாக இடது கையில் பிடித்துக்கொண்டு வலது கையால் மாவை குழிக்கரண்டியில் எடுத்து கரண்டியில் ஊற்றி லேசாகபூந்திக் கரண்டியின் ஓரத்தை குழிக்கரண்டியால் தட்ட வேண்டும் .
பூந்தி எண்ணெயில் உருண்டு ஓடும் .எண்ணெய் சரியாக காயாவிட்டால் பூந்திகள் நடுவில் சேர்ந்து ஒட்டிக்கொள்ளும்.
கலர் பூந்தி என்றால் புட் கலரைதனித்தனி மாவில் கரைத்து
தனித்தனியாக பொரித்தெடுக்க வேண்டும்.தீபாவளி பட்சணத்தோடு
கொஞ்சம் காரமும் கரகரப்பும் இருந்தால் தான் தீபாவளி கலகலக்கும்.
No comments:
Post a Comment