Wednesday, October 30, 2013

திருமலையில் 3ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்

திருமலையில் 3ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்



திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வரும், 3ம் தேதி, தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

உற்சவங்கள் ரத்து: ஒவ்வொரு ஆண்டும், தீபாவளியையொட்டி, ஏழுமலையான் கோவிலில், தங்க வாசலுக்கு அருகில் உள்ள, கண்டா மண்டபத்தில், தீபாவளி ஆஸ்தான நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு, நவம்பர், 3ம் தேதி, காலை, 7:00 மணியில் இருந்து 9:00 மணிக்குள், கண்டா மண்டபத்தில், அலங்கரிக்கப்பட்ட, சர்வ பூபாள வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருள்வார். அதைத் தொடர்ந்து, சிறப்பு பூஜை, அபிஷேகம், அர்ச்சனை செய்து, பஞ்சாங்கம் படிக்கப்படும். இந்நிகழ்ச்சியில், அனைத்து தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொள்வர். இந்நிகழ்ச்சி காரணமாக, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்தோற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஆகியவற்றை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. தோமாலை, அர்ச்சனை ஆகியவை, பக்தர்கள் இல்லாமல், தனிமையில் நடத்தப்படும். சுப்ரபாதம் மற்றும் சகஸ்ர தீபாலாங்கார சேவைகளில் கலந்து கொள்ள, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

No comments:

Post a Comment