Saturday, April 6, 2013

ஜவ்வரிசி வடாம்


ஜவ்வரிசி வடாம் செய்முறை விளக்க படங்களுடன்

வழங்கியவர்-  திருமதி சாவித்திரி வாசன்

இன்னைக்கு முதல் நாள் வடாம் செஷன்
எங்க வீட்ல

எப்பவுமே நாங்க முதல்ல செய்யற வடாம் ஜவ்வரிசி
வடாம் தான் அது ஒரு சோதனை ஓட்டம் போல




ஜவ்வரிசி வடாம் செய்ய தேவையானவை

ஜவ்வரிசி
எலுமிச்சை
பச்சை மிளகாய்
உப்பு தேவைக்கேற்ப





இன்று நாங்கள் எடுத்துக்கொண்ட அளவு

ஜவ்வரிசி 1 கிலோ
எலுமிச்சை 5
பச்சை மிளகாய் 150 கிராம்

உப்பு தேவைக்கேற்ப




ஜவ்வரிசி முதல்ல தண்ணில சுத்தம் செய்து
நீரை வடித்து வைத்துக்கொள்ளவும்


எலுமிச்சை சாறு தயார் செய்து கொளவும்
பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து மிசியில்
மைய்ய(நைசாக) அரைத்துக்கொள்ளவும்






ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் விட்டு
அதனுடன் அரைத்த மிளகாய் விழுது எலுமிச்சை
சாறு சேர்த்து அடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும்.

நல்ல கொதிவந்ததும் , நீர் வடிகட்டி வைத்த
ஜவ்வரிசியை அதனுடன் சேர்த்து மேலும் சிறிது
நேரம் (10 நிமிடம்)நன்றாக கிளறி கொதிக்கவிடவும்
கொஞ்சம் 1 டீஸ்பூனில் எடுத்து ஆறவைத்து சுவை
பார்க்கவும் (உப்பு , காரம், புளிப்பு) தேவைக்கேற்ப
சரி செய்துகொள்ளவும் .


இதோ தயாராகி விட்டது ஜவ்வரிசி வடாம் செய்வதற்கு

முன்பெல்லாம் இதை வீட்டில் உள்ள புடவை, அல்லது
வேட்டி இவைகளை நன்றாக சுத்தம் செய்து அவற்றில்
இந்த வடாம் செய்து வெயிலி காய வைப்பார்கள் , காய்ந்த
பின்பு இந்த துணியின் பின்புறம் நீர் தெளித்து காய்ந்த
ஜவ்வரிசி வடாத்தை உரித்து எடுத்து பிறகு நியூஸ் பேப்பரில்
காய வைத்து எடுப்பார்கள் .

ஆனால் இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் சீட் மிகவும்
பேருதவியாக உள்ளது. காய்ந்ததும் எளிதில் உரித்து
எடுக்க முடியும். நாமும் அவ்வழியே பின்பற்றுவோம்.இ

இனி இதை பிளாஸ்டிக் சீட்டில் இட்டு தயார் செய்யும்
முறையை பார்ப்போம்.





வடாத்து மாவு தயார் இனி அடுத்த கட்ட நடவடிக்கை

மொட்டை மாடி நோக்கி பயணம் , அங்கே தரை
நன்றாக சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து வடாம்
இடும் பிளாஸ்டிக் தாள்களை நன்றாக சுத்தம் (தண்ணீரில்)
செய்து, தரையில் விரித்து அது பறக்காவண்ணம் நான்கு
பக்கமும் செங்கல் வைத்து வேலையே தொடரவேண்டும்



வடாத்து மாவை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு
கொஞ்சம் நீர் விட்டு இளக்கிகொண்டு ஒரு ஸ்பூன் துணையுடன்
கொஞ்சம் கொஞ்சமாக ஒரே சீரான வரிசையில் வைத்து
அழகு பார்க்கலாம் , இதிலும் ஒரு கை பக்குவம் மிளிரத்தான்
செய்கின்றது .




என்ன அன்பு நெஞ்சங்களே எங்களது அனுபவங்களை
உங்களுடன் பகிர்ந்துகொண்டோம் , நீங்களும்
உங்கள் செய்முறை அனுபவங்களை .......... எங்க போறீங்க
கடைக்கு ஜவ்வரிசி வாங்கவா !!!

பார்த்து நல்ல ஜவ்வரிசியா வாங்கிட்டு வாங்க வடாம்
இட்டு பொரித்து பார்க்கும்போது முத்துக்களால்
பொரித்து எடுத்த சிப்பி போல அழகாக இருக்க வேண்டும்

கொஞ்சம் மாவு தனியா எடுத்து வச்சிருக்கேன்
சாப்பிடதான் , உங்களுக்கு தெரியாத சுவையா
சுவைத்து பாருங்கள்இங்கே கொடுக்கப்பட்டவை பலர்
அறிந்ததே இருப்பினும்
தெரியாதவர்களுக்கு ஒரு முறை சொல்வதன் மூலம்
எனக்கும் இன்னமும் நன்றாக மனதில் பதியும் என்ற
நோக்கத்தில் கொடுத்துள்ளேன்.

இதில் சில மாற்று முறைகள் இருக்கும் , வண்ணங்கள்
சேர்ப்பது , அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப வடிவமைப்பது
அதுபோன்றவற்றை அன்பு நெஞ்சங்கள் பகிர்ந்து கொண்டால்
இவனும் அறிந்து மகிழ்வேன்.

வெயில் காலம் ,  
சுட்டெரிக்கும் வெயிலானாலும் 
சுவைக்க ஏற்ற பல வடாம் வத்தல் இவற்றை 
செய்வதற்கும் ஏற்ற பருவம் இது .....பருவத்தே பயிர் செய்யலாமே 

No comments:

Post a Comment