எப்படி சொன்னாலும் சுவை மாறாது
மோர் மிளகாய் , இது பெரும்பாலும் ஒரு ஊறுகாய் வகை
என்றே சொல்லலாம்.
பச்சை மிளகாயில், தஞ்சாவூர் சின்ன குடமிளகாயில்
இந்த ஊறுகாயை தயார் செய்யலாம்
இது நீட்டு மிளகாய், அல்லது ஊசி மிளகாய்
இது தஞ்சாவூர் குடைமிளகாய்
இந்த மிளகாயை நன்றாக தண்ணீர் விட்டு சுத்தம் செய்து
கொஞ்சம் கீறி மோரில் போட்டு , உப்பு தேவைக்கேற்ப
சேர்த்து 2 அல்லது 3 நாட்கள் ஊறவிட வேண்டும். பிறகு
தினமும் வெயிலில் காயவைத்து மாலை மீண்டும் அந்த
மோர் கரைசலில் போட்டு வைக்கவேண்டும் , நாட்கள்
செல்ல செல்ல மோர் கரைசல் முழுதும் உறிஞ்சப்பட்டு
விடும். பிறகு வெயிலில் நன்றாக காய வைக்கவேண்டும்
பிறகு இதுபோல் நன்றாக காய்ந்ததும் , காற்றுபுகாத
கண்ணாடி பாட்டில் அல்லது டப்பாவில் எடுத்து
பத்திரப்படுத்தி வைக்கவும். தேவையான பொழுது
கொஞ்சம் எண்ணை வைத்து அதில் காய்ந்த மிளகாயை
போட்டு பொரித்து எடுக்கவும்
இந்த வறுத்த மோர் மிளகாயின் முதல் பயன்பாடு
தயிர் சாதத்திற்கு ஊறுகாய் போல் தொட்டுக்கொள்வது
பிற பயன்பாடுகள்
மோர் களி செய்யும்போது இதை தாளிப்பதற்கு
பயன் படுத்தலாம்.
வருத்த வேப்பம்பூ, சுண்டைக்காய், மணத்தக்காளி
இவற்றுடன் சேர்த்து இதையும் வறுத்து சாதம் பிசைந்து
சாப்பிடலாம்.
என்னங்க தெரிஞ்சுதா இப்ப இதோட பயன்பாடு
வாங்குங்க மிளகாய் , போடுங்க ஊறுகாய்
மிளகாய் வாங்குங்க , மோரும் உப்பும் சேர்த்து
ஊறுகாய் போடுங்க , உபயோகப்படுத்துங்க
No comments:
Post a Comment