தேவை:-
சாதம் வடித்த கஞ்சி - 2 கப்,
மோர் - 1 கப்,
இஞ்சி - ஒரு துண்டு,
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவைக்கேற்ப
காய்கறிக் கலவை (விரும்பினால்) - கால் கப்,
மல்லித்தழை - கொஞ்சம்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:-
பச்சை மிளகாய், இஞ்சியை மெல்லியதாக நறுக்குங்கள்.
எண்ணெயைக் காயவைத்து பச்சை மிளகாய், இஞ்சி,
கறிவேப்பிலையை போட்டு வதக்கி,
(காய்கறி சேர்ப்பதானால் இப்போது சேர்த்து வதக்கி),
வடித்த கஞ்சி, அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து 5 நிமிடம்
கொதிக்கவிடுங்கள். பிறகு இறக்கிவைத்துவிடவும்
கடைந்த மோரை அதனுடன் சேருங்கள்.
கொத்தமல்லி போட்டு பரிமாறுங்கள்.
தேவை என்றால் மிளகுத்தூள் கொஞ்சம் மேலே தூவி
பருகலாம் - ஆனால் பச்சை மிளகாய் நீக்கிவிடவும்
(மிளகாய் காரத்தைவிட , மிளகு காரம் உடலுக்கு நல்லது)
வடித்த காஞ்சியில் சூப் குடித்தால் வயிறு நிரம்பும்
No comments:
Post a Comment