Sunday, November 25, 2012

நாராயண சேவை



தினசரி தியானம்



நாராயண சேவை

நரர்கள் எல்லாரும் நாராயண சொரூபங்கள் என்று அவர்களை போற்றுவேனாக.


ஆலயத்தின்கண் எழுந்தருளப் பண்ணியிருக்கும் மூர்த்தியை ஆராதிப்பதன் மூலம் ஆராதனை முறையைக் கற்றுக்கொள்கிறோம். பின்பு நாம் தொடர்வுகொள்ளும் உயிர்கள் அனைத்துக்கும் உள்ளன்போடு பணிவிடை செய்தல் வேண்டும். உயிர்களிடத்து நாம் கொண்டுள்ள இணக்கமே இறைவணக்கம் என்னும் பெயர் பெறுகிறது.


ஆதிமுதலாகி நின்ற அரியென்ற அட்சரத்தை
ஓதியறிந்துள்ளே உணர்வதினி எக்காலம்?
-பத்திரகிரியார்

No comments:

Post a Comment