Monday, November 26, 2012

விநயம்



தினசரி தியானம்



விநயம்

கனி நிறைந்த கிளை தானாக வளைவது போன்று கருணாகரனே, நான் கிருபைக்கு ஆளாகும்பொழுது விநயம் என்னிடம் தானாக வந்துவிடுகிறது.


மேட்டில் மழை நீர் நிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு அது பாய்ந்து சாகுபடிக்கு உதவுகிறது. வீண் பெருமை கொண்டிருப்பவன் உள்ளத்தில் இறைவன் அருள் தங்குவதில்லை. விநயத்துடன் பணிந்திருப்பவன் உள்ளமே அருளுக்குத் தங்குமிடமாகிறது.


பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமால் தன்னை வியந்து.
-திருக்குறள்

1 comment: