தினசரி தியானம்
இயற்கையில் நம்பிக்கை
இயற்கையின் செயலும் இறைவன் செயலும் ஒன்றே என்று உணர்ந்து அதை முற்றிலும் நம்பியிருப்பேனாக.
குடியானவன் ஒருவன் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடுகிறான்; பூமியைத் திருத்தியமைக்கிறான். பருவத்தில் விதை விதைக்கிறான். பிறகு அவன் முற்றிலும் இயற்கையை நம்பியிருக்கிறான். மழை, காற்று, வெயில் முதலியன முறையாக அமையவேண்டுமென்று வழுத்துகிறான். இயற்கையில் வைக்கும் நம்பிக்கையும் தெய்வத்திடம் வைக்கும் நம்பிக்கையும் ஒன்றேயாம்.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
-திருக்குறள்
No comments:
Post a Comment