Sunday, October 7, 2012

இதுதாங்க அர்த்தம்

இதுதாங்க அர்த்தம் !!!

எல்லாம் அறிந்த நாரதருக்கே ஒரு சந்தேகம் எழுந்தது

நாராயணன் என்றால் என்ன என்று ஒரு முனிவரிடம் கேட்டார்



முனிவரும்  இது மிகவும் சுலபம்

'நாரம்' என்றால் தண்ணீர் , 'அயனன்' என்றால் சயனித்திருப்பவன் , அவன்
கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா?  அதனால் நாராயணன் என்றார் முனிவர் , இருந்தும் நாரதருக்கு இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை , எதற்கும் நாம் நாராயனிடமே  கேட்டு விடலாம் என்று ஓடோடி வந்தார்

"ஐயனே ! உம்மை நான் நாராயணா! நாராயணா! என்று  துதிக்கின்றேன்
அனால், அதற்க்கு சரியான இலக்கம் தெரியவில்லை , அது உம பெயர்தானே
நீரே அதற்க்கு சரியான விளக்கம் சொல்லும் என்றார்.

குறும்புக்கார நாரதரின் கேள்விக்கு , குறும்பாகவே பதிலளிக்க எண்ணி ,
அடடா எனக்கும் தெரியாதே! எதற்கும் நீ நர்மதை கரையில் இருக்கும்  வண்டிடம் கேள் என்றார்

நாரதர் வண்டிடம் ஒடி வந்து "வண்டே ! நாராயணன் என்ற பதத்திற்கு
அர்த்தம் தெரியுமா? என்று கேட்க , நாராயணன் என்ற பெயரை
கேட்ட மாத்திரமே வண்டு விழுந் இறந்து போனது.

நாரதர் மிகுந்த வருத்தத்துடன் நாராயணனிடம் வந்து , 'நாராயணன்' என்ற
நாமம் கேட்டால்  இறந்து விடுவார்கள் அதுதானே அர்த்தம் என்றார்.

நாராயணனும் அப்படி நான் கேள்விப்பட்டதே இல்லையே , எதற்கும் அதோ!
அந்த "கிளியிடம் கேள்" என்று  ஒரு மரத்தை காட்டினார்,



நாரதரும் கிளியிடம் இதே கேள்வியை கேட்க , கிளியும் சுருண்டு விழுந்து
இறந்தது., இதைக்க் கண்ட நாரதர் , திக்கித்துப் போய் , மூச்சுக்கு 300 முறை
நாம் நாராயணா, நாராயணா என்று சொல்கிறோமே , அப்படியானால் நம்
கதையும் அதுதானோ என்று பயத்துடன் நாராயணனிடம் வந்தார்.

பெருமானே அதற்க்கு 'அதுதான்' அர்த்தம் என்று உறுதியாகிவிட்டது என்று புலம்ப ஆரமித்தார்.

நாரதா அவை விதி முடிந்து இறக்கின்றன, எதற்கும் நீ அந்த பசுவின் கன்றிடம்
கேட்டுப்பார் என்று கூற. எம்பெருமானே  வேண்டாம் எனக்கு பசுவின் கன்றை
கொன்ற கொடும் பாவம், என்று கூற, எம்பெருமானும் , நாரதரே நீர் ஒரு
தபஸ்வி , தபஸ்விக்கு தைரியம் வேண்டாமோ என்று உசுப்பி விட , நாரதரும்
கன்றிடம் பொய் கேட்க , கன்றும் கீழே விழுந்து மடிந்தது.

நாராயணா எல்லாம் போச்சு , இனி உம்மிடம் எனக்கென்ன பேச்சு, பசுக்கன்றை
கொன்ற கொடிய பாவத்திற்கு நான் ஆளாகிவிட்டேன் வருகின்றேன் என்று
கூறி கிழமை யத்தனிக்க, பெருமாள் தடுத்தார். நாரதா கலங்காதே, இதுவரை
நீ கேட்டது, பூச்சி, பறவை, விலங்கு! இனி நீ காசி அரசரிடம் பொய் கேள் ,
அவன் மனிதனாயிற்றே , அவனுக்கு ஏதும் ஆகாது என்று கூறினார்.

நாரதரோ , வேண்டாம் பிரபோ , அரச குற்றம் எனக்கு ஆகாது என்று மறுத்தார்.
நாராயணன் அவரை சமாதானம் செய்து  அரசரிடம் அனுப்பி வைத்தார். நாரதரும்  அரசரிடம் பயந்துகொண்டே , மிகவும் பவ்யமாக  கேள்வியை கேட்டார்.  இளவரசருக்கு ஏதும் ஆகவில்லை அவனும் அழகாக பதில்
சொன்னான்.

"நாரதரே!  வண்டாய் ,  கிளியாய், கன்றாய் உம்  முன் காட்சி தந்தது  யாமே
உம வாயால் 'நாராயணா' என்ற  நாமத்தை திரும்ப, திரும்ப சொல்லக் கேட்டு
பிறவியிலேயே உயர்ந்ததான மனிதப்பிறவியை அதிலும் செல்வங்களை
அனுபவிக்கத்தக்க இளவரசனாய் பிறந்திருக்கின்றேன், தொடர்ந்து  நாராயண
மந்திரத்தை ஓதி வைகுண்டம் செல்வேன் என்றான்.



"ஆகா! 'நாராயணன்' என்றால் 'வாழும் காலத்தல் செல்வம் அருள்பவன்',
'வாழ்வுக்குப் பின் பிறவிப்பணி தீர்ப்பவன்' என்றல்லவா அர்த்தம் எனப்
புரிந்து கொண்டார் நாரதர். 

No comments:

Post a Comment