Tuesday, October 9, 2012

சீர்திருத்தம்


தினசரி தியானம்

சீர்திருத்தம்

     உன்னை நாடுகிற பெருநாட்டத்தில் ஈசா, நான் உன் மயம் ஆய்விடுகிறேன்.

     எண்ணத்துக்கு ஏற்றவாறு புறவுலகம் காட்சி கொடுக்கிறது. கெட்ட எண்ணமுடையவனுக்குப் புறவுலகில் கேடு மிக நிறைந்திருக்கிறது. எண்ணத்தை ஒழுங்குபடுத்துமளவு கேடு உலகினின்று அகன்று விடுகிறது. சீர்திருத்தம் யாவும் மனத்தில் இருக்கிறது.

வான்கெடுத்துத் தேடும்
     மதிகேடர் போல எமை
நான்கெடுத்துத் தேடாமல்
     நன்கறிவ தெந்நாளோ?
-தாயுமானவர்

No comments:

Post a Comment