அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் - உத்திரம் நட்சத்திரம்
மூலவர்: மாங்கல்யேஸ்வரர்
உற்சவர்: சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார்: மங்களாம்பிகை
தல விருட்சம்: பவளமல்லி
தீர்த்தம்: கிணறு
பழமை: 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்: இடையாற்று மங்கலம்
மாவட்டம்: திருச்சி
மாநிலம்: தமிழ்நாடு
விழாக்காலங்கள்:-
விநாயகர் சதுர்த்தி, ,
நவராத்திரி,
திருக்கார்த்திகை,
திருவாதிரை,
பங்குனி உத்திரம் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தல மகிமை:-
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை,
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
மாங்கல்ய மகரிஷி உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகிய மகரிஷிகளின் திருமணத்தில், மாங்கல்ய தாரண பூஜை நிகழ்த்தியவர். இவரது தவ வலிமை அனைத்தும் அவரது உள்ளங்கைகளில் அடங்கியிருந்தது. மாலைகளை தாங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கெல்லாம் இவரே குரு(திருமணப்பத்திரிகைளில் மாங்கல்யத்துடன் பறப்பது போன்ற தேவதைகளைஅச்சிடும் வழக்கம் இப்போதும் உள்ளது) திருமணத்திற்கான சுப முகூர்த்த நேரத்தை அமிர்த நேரம் என்பர். இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல் சூட்சும வடிவில் இத்தலத்து, மாங்கல்யேஸ்வரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதாக ஐதீகம். உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால்தான், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன.
+91 431 - 254 4070,
98439 51363
மூலவர்: மாங்கல்யேஸ்வரர்
உற்சவர்: சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார்: மங்களாம்பிகை
தல விருட்சம்: பவளமல்லி
தீர்த்தம்: கிணறு
பழமை: 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்: இடையாற்று மங்கலம்
மாவட்டம்: திருச்சி
மாநிலம்: தமிழ்நாடு
விழாக்காலங்கள்:-
விநாயகர் சதுர்த்தி, ,
நவராத்திரி,
திருக்கார்த்திகை,
திருவாதிரை,
பங்குனி உத்திரம் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தல மகிமை:-
இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
திருமணத் தடை நீக்கும் தலமாகும்.
வழிப்பாடு நேரம்:-
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
பொதுவான தகவல்கள்:-
உத்திரம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: உறவினர்களிடமும், நண்பர்களிடமும் இனிமையாகப் பழகுவர். பிறர் செய்த உதவிகளை நன்றியோடு எண்ணும் பண்பு கொண்டவர்கள். சுகபோகங்களை அனுபவிப்பதில் விருப்பம் இருக்கும். வாக்கு நாணயம் தவறாத குணம் கொண்ட இவர்கள், தெய்வ வழிபாட்டில் பக்தியோடு ஈடுபடுவர்.
மாங்கல்யேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், மாங்கல்ய மகரிஷி, தட்சிணாமூர்த்தி,பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நந்தி, நவக்கிரகங்கள் உள்ளனர்.
மாங்கல்யேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், மாங்கல்ய மகரிஷி, தட்சிணாமூர்த்தி,பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நந்தி, நவக்கிரகங்கள் உள்ளனர்.
தலமகிமை:-
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திரத்தன்றோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய உத்தமத்தலம். தங்களது கணவன்மார்கள் நீண்ட ஆயுளடன் சிறப்பாக வாழவும், பாதங்களில் புரை நோய் உள்ளவர்களும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் பிள்ளைகளுடன் சேரவும் இங்கு பிரார்த்தனை செய்து பலனடைகிறார்கள்.
தலபுராணம் :-
வேண்டுதல்:-
உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்திற்குரிய முக்கிய பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. குடும்ப ஒற்றுமைக்காகவும், உடலில் கால்வலி குணமாகவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. உத்திரத்தில் பிறந்த பெண்கள், தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ இவரை வணங்கி வரலாம். பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் குடும்பத்துடன் சேரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:- திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தவுடன் விரைவில் திருமணம் கூடுகிறது. திருமணம் நிச்சயம் ஆனவுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று, பின் இங்கு வந்து மாங்கல்ய மகரிஷியிடம் பத்திரிக்கை வைத்து எங்களது கல்யாணத்தையும் சிறப்பாக நடத்தி கொடுங்கள் என வேண்டுகின்றனர். கல்யாணம் நடந்தவுடன் தம்பதி சமேதராக வந்து வழிபாடு செய்கின்றனர்
விலாசம்:- அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
இடையாற்று மங்கலம்-621 218 வாளாடி வழி, லால்குடி தாலுக்கா,
திருச்சி மாவட்டம்.
இடையாற்று மங்கலம்-621 218 வாளாடி வழி, லால்குடி தாலுக்கா,
திருச்சி மாவட்டம்.
தகவல் தொடர்பு:-
98439 51363
No comments:
Post a Comment