Monday, October 29, 2012

சோம்பல்



தினசரி தியானம்



சோம்பல்



யாண்டும் பேரூக்கம் படைத்திருந்து பரமனைப் போற்றி வருவேனாக.


ஆத்ம சாதனத்துக்குப் பேரிடைஞ்சலாயிருப்பது சோம்பல். அதை அகற்ற இயலாதவர்க்கு முன்னேற்றமில்லை. தேவைக்குமேல் உடலுக்கு ஓய்வும், உறக்கமும் கொடுத்தால் அது சோம்பலாகும். இன்று செய்து முடிக்க வேண்டியதை நாளைக்கென்று ஒத்திவைப்பது சோம்பல்.


மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
-திருக்குறள்

No comments:

Post a Comment