Wednesday, October 31, 2012

சில்லரை மாற்றுதல்



தினசரி தியானம்



சில்லரை மாற்றுதல்

பரம்பொருளே, உன்னை உள்ளத்தினுள் உள்குவதும் உரக்க உன்னைப் போற்றிப் புகழ்வதும் எல்லாம் உனக்குகந்த வழிபாடே.


பொன் காசு ஒன்றுக்குச் சில்லரை மாற்றினால் பை நிறைய தாமிரக் காசுகள் கிடைக்கும். சிறிய பண்டங்களை விலைக்கு வாங்குதற்கும் அவைகள் உதவும். ஆனால் அவைகளின் மதிப்போ குறைவானது. கடவுளைப் பற்றி மனத்தில் உணர்வது பொற் காசு போன்றது. அவரைப் பற்றிப் பேசுவது தாமிரச் சில்லரைக் காசு போன்றது


அல்லும் பகலும் அறிவாகி நின்றவர்க்கே
சொல்லும் பொருளுஞ் சுமைகாண் பராபரமே
-தாயுமானவர்

No comments:

Post a Comment