Friday, October 12, 2012

ஓயாத பாடம்



தினசரி தியானம்

ஓயாத பாடம்

உன்னை அடைதற்கான பாடத்தை ஈசா, நீ ஓயாது புகட்டிக்கொண்டே இருக்கிறாய்.


மனிதன் ஆனந்தத்தை நாடுகிறான். ஆனால் நிலையற்ற உலகப் பொருள்களிடத்தில் அவன் அதை நாடி ஏமாற்றமடைகிறான். அடிமேல் அடியடித்து இயற்கைத் தாய் அந்த இன்பம் அழியும் பொருள்களிடத்து இல்லையென்ற பாடத்தைப் புகட்டுகிறாள். ஆனந்தத்துக்கு இருப்பிடம் இறைவன் என்பதை அறிந்துகொள்ளும்வரை அப்பாடம் நடக்கிறது.


ஓயாதோ என் கவலை உள்ளே ஆனந்தவெள்ளம்
பாயாதோ ஐயா பகராய் பராபரமே.

-தாயுமானவர்

No comments:

Post a Comment