Tuesday, October 23, 2012

கடலின் அடிமட்டம்



தினசரி தியானம்



கடலின் அடிமட்டம்



உள்ளத்தினுள்ளே அமைதியில் நிலைத்திருந்து இறைவா, உன்னை நான் போற்றுவேனாக.


கடலின் மேற்பகுதியில் அலை வீசுகிறது. மலை போன்று அது உயர எழுகிறது. ஆனால் ஆழமான அடிமட்டத்தில் அது அசையாதிருக்கிறது. மனிதனுடைய மனத்தின் அடிப்பகுதி அங்ஙனம் அசையாதிருக்கவேண்டும். தெய்வ சாந்தி நிலவுதற்கு அந்த அடிப்பகுதியே உற்ற இடமாகும்.


மற்றிடத்தைத் தேடியென்றன் வாழ்நாளைப் போக்காமல்
உற்றிடத்தைத் தேடி உறங்குவது மெக்காலம்?
-பத்திரகிரியார்

No comments:

Post a Comment