தினசரி தியானம்
சமாதானம்
என்னை உன் சொரூபத்தில் ஒடுக்கினாலொழிய சமாதானத்தை நான் எங்ஙனம் காண்பேன், ஈசா?
சமாதானம் வேண்டுமென்று உலகத்தவர் ஓலமிடுகின்றனர். ஆனால் அவர்கள் உள்ளத்தில் ஓயாது பொங்கியெழுந்து கொண்டிருப்பது போராட்டமும் சஞ்சலமுமேயாம். தான், தனது என்பனவற்றைத் துறந்தார்க்கன்றி நிலைத்த சமாதானம் உண்டாகாது.
கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதியெல்லாஞ்
சுட்டறுத்து நிட்டையிலே தூங்குவது மெக்காலம்?
-பத்திரகிரியார்
No comments:
Post a Comment