Sunday, September 23, 2012

முறை மாற்றம்



தினசரி தியானம்



முறை மாற்றம்

போகத்தை நாடுகிற நாட்டம் யோகத்தை நாடுகிற நாட்டமாக என்னிடத்து மாறியமையும்படி ஈசா, அருள்புரிவாயாக.


நீர்வீழ்ச்சி என்னும் ஆகர்ஷண சக்தியை மின்சக்தியாக மாந்தர் மாற்றியமைக்கின்றனர். போராட்டத்தை மனிதன் அமைதியாக மாற்றவேந்தும். காமத்தை கடவுள் பக்தியாக்க  வேண்டும் . வெறுப்பை அருள் கலந்த இரக்கமாக மாற்றிவிட வேண்டும். அப்பொழுது மனிதன் சான்றோனாக மா றி  விடுகிறான்.


விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன்
கிட்டேன் அவருரை கேட்டும் இரேன்மெய் கெடாதநிலை
தொட்டேன் சுகதுக்க மற்றுவிட்டேன் தொல்லை நான்மறைக்கும்
எட்டேன் எனும்பரம் என்னிடத்தே வந்திங் கெய்தியதே.
-பட்டினத்தார்

No comments:

Post a Comment