Sunday, September 9, 2012

பொரிச்ச கூட்டு

                                     (பலவிதமான) பொரிச்ச கூட்டு

அது என்ன பொரிச்ச கொட்டு , இந்த கூட்டுக்கு குழம்பு பொடி போடுவதற்கு
பதிலா  மசாலாக்களை பொரிச்சு ( வறுத்து ) அரைத்து விழுதாக
போடுவதால் , பெயர்க்காரணம்


உபயோகப்படுத்தக்கூடிய காய்கள் :-

1. அவரைக்காய்
2. கொத்தவரைக்காய்
3. பீன்ஸ்
4. முருங்கைக்காய்
5. கத்தரிக்காய்
6. பெங்களூர் கத்தரிக்காய்
7. பூசணிக்காய்
8. புடலங்காய்

மேலே சொன்னவற்றில் ஏதேனும் ஓன்று

தேவையானவை :

பயத்தம் பருப்பு

வறுத்து அரைத்து விழுது எடுக்க

மிளகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு
இவைகளை வறுத்து , இவற்றுடன் ஜீரகம் தேங்காய்
துருவல் சேர்த்து நன்றாக கெட்டியாக அரைத்து
விழுது தயார் செய்யவும்.(மிளகு சற்று அதிகமாக
இருந்தால் உடலுக்கு நல்லது)

பயத்தம் பருப்பு வேகட்டும் , காய் நறுக்கி அதில்
போட்டு, உப்பு சேர்த்து ,அரைத்த விழுதை அதில் போட்டு
நன்றாக கொதிக்க விடவும் .




கடுகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு
தாளிக்கவும்.

கருவேப்பிலை சேர்க்கவும் .

பரிச்சியமான பலவிதமான பொரிச்ச கூட்டு
அதிசயமான அரைத்துவிட்ட கூட்டு






No comments:

Post a Comment