Saturday, September 8, 2012

அவியல்! , அவியல் !! , அவியல் !!!

அவியல்! , அவியல் !! , அவியல் !!!        By:- Savithri Vasan


என்னடா இவன் ஏலக்கடை ஆளான்னு பாக்குறீங்களா
இல்லைங்க , அவியல் மூன்று வகைப்படும்

தஞ்சாவூர் அவியல், மலபார் அவியல் , கேரளா அவியல்

நான் சொல்லப்போறது தஞ்சாவூர் அவியல்

தேவைப்படும்  இன்றி அமையாத காய்கள்

உருளை
சேனை
சேம்பு
அவரை
கொத்தவரை
பீன்ஸ்
கரட்
சௌ,சௌ
பூசணி
பட்டாணி
முருங்கைக்காய்

விழுது அரைத்துக்கொள்ள

தேங்காய் 1 மூடி
பச்சை மிளகாய் 5
ஜீரகம்         2 டீஸ்பூன்
அரிசி           2 டீஸ்பூன்

கெட்டித் தயிர் 3 கப்

தோல் உரிக்கவேண்டிய காய்களை  உரித்து, சீவ வேண்டிய காய்களை  தோல் சீவி , ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு
தண்ணீர் அதிகம் விட்டு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்


மிக்சியில் விழுது தயார் செய்து வைக்கவும்

தயிர் தண்ணீர் சேர்க்காமல் கடைந்து கெட்டியாக வைத்துக்கொள்ளவும்

இப்ப பாருங்க காய் வெந்திருக்கும் , அதுல இந்த அரைத்த விழுதை
தயிரில் கலந்து காயுடன் சேர்க்கவும் ,

அவியல் கொதிக்க ஆரம்பிக்கும் , நறுமணம் மூக்கை துளைக்கும்
நாக்கு சுவைக்க துடிக்கும் .



நன்றாக கொதிக்கவிட்டு , அடுப்பில் இருந்து இறக்கும் முன்
2 முட்டை தேங்காய் எண்ணை சேர்க்கவும் . கருவேப்பிலை
சேர்க்கவும்

சூடான அவியல் சுவையுடன் பரிமாற தயார்

"காய்களின்  சங்கமம் அவியல் , நம் மனங்களின் சங்கமம் அன்பு
ரெண்டும்  ஓன்றுதாங்க "





No comments:

Post a Comment