Sunday, September 16, 2012

கொத்துக்கடலை சுண்டல்

கொத்துக்கடலை சுண்டல்


தேவையானவை

கொத்துக்கடலை  1/4 கிலோ (கருப்பு/வெள்ளை)
பச்சை மிளகாய்     2
கருவேப்பிலை        கொஞ்சம்


தாளிக்க

கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் 1

கொத்துக்கடலை  முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்
ஊறவைக்கவும்.

மறுநாள் மதியம் குக்கரில் 5 விசில் சத்தத்தில் உப்பு போட்டு
வேகவைத்துக் கொள்ளவும் .

கடலை வெந்தவுடன்  தண்ணீரை வடித்து , அதில் பச்சை மிளகாய் ,
கடுகு, உளுத்தம் பருப்பு, வெத்த மிளகாய் தாளிக்கவும் .




கைமணம் தந்த நாவினிக்கும் சூடான சுண்டல் ரெடி

இதை  மாலை நேரத்தில் வாரத்தில் இரண்டு நாள் வயதானவர்கள்
ஒரு சிற்றுண்டிபோல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது .



 நவராத்திரி ஸ்பெஷல் - சுண்டல் 1

No comments:

Post a Comment