Friday, September 7, 2012

வசிஷ்ட பாரதியாரின் வம்சா வளி - நேற்றைய தொடர்ச்சி

வசிஷ்ட பாரதியாரின் வம்சா வளி ..............பகுதி 2   By: S.S.VASAN



அருமைச் சகோதரர்கள்.


மேற்சொன்ன அஷ்டசகஸ்ர வகையில், ஆத்ரேயா கோத்திரம், ஆசுவலாயன சூத்திரம் இருக்கும் வேதி மூலபுருடர் தமையன் ராமஸ்வாமி பாரதி , தம்பி வைத்யநாத பாரதி. இவ்விருவருக்கும் உருவத்திலும் குணத்திலும் ஒத்தவர்கள். தமையன் தம்பியின் மேல் கருணையும் அன்புமுடயவர் , தம்பியோ தமையன் மேல் மிக்க விசுவாசமும் பக்தியுமுடயவர். தமையன் எள் என்பதற்குள் தம்பி எண்ணையாய் நிற்பார். குறிப்பறிந்து ஏவின செய்யும் இயல்புடையவர். இவரை இராமருக்கு இயன்ற பணி செய்யும் இராமானுஜன் என்று சொல்லலாம்.


இவர்கள் அரியலூருக்கு அருகிலுள்ள உடையார் பாளையம் ஜமீந்தார் யுவரங்க பூபதி சமூகத்தில் இருந்தார்கள், இவர்கள் வடமொழி, தென்மொழி, சங்கீதம், பரதம், ஜோதிடம், வைத்தியம் முதலிய கலைகளில் தலைவராய் இருந்து அந்த யுவரங்க பூபதி சபையில் கண்போல விளங்கினார்கள். ஜமீன்தாரும் எல்லாக் கலைகளிலும் பழகியவராதலின், வித்வான்கள் செயலறிந்து கொடுக்கும் வள்ளலாயிருந்தார்.

ஒரு சமயம் ஜமீந்தார் சபையில் சங்கீத வித்தையின் திறமையை பாடிக் காட்டும் பொழுது துரையவர்கள் சரிகைத் தலைப்பாகை ஓன்று கொடுத்தார். இவ் வறுமைச் சகோதரர்கள் அக் கொடைச் சிறப்பித்து மோகன ராகத்தில் ஒரு 

"பல்லவி ச - ரி - க - பா - கா இச்சாரோ" (சரிகா) என்று 

எடுத்துக் கொண்டு பாடினார்கள். அது இந்த மோகனராகத்தின் ஆரோகன ஸ்வரம். அந்த ராகத்திலேயே "சரிகைப்பாகை" கொடுத்தார் என்ற அர்த்தம் அடங்கியிருக்கிறது; இது வெகு விசித்திரம் , 

இதைக் கேட்டு மகிழ்ந்த ஜமீந்தார்,
"சா - தா - ப - கா - இச்சேரா" - என்று அந்த ராகத்தின் அவரோகன ஸ்வரத்தில் சாதா பாகை கொடுக்கப்பட்டது என்று தன் கொடைத் தாழ்த்தி வினயமாகப் பதில் உபசாரமாக தாமும் பாடிக் காட்டினாராம். என்ன அருமையினும் அருமை பிரபுக்கள் இப்படியன்றோ இருக்கவேண்டும் , அப்படி அருமை அறிந்த பிரபுக்களின் முன்னிலையில் அன்றோ வித்வான்கள் பெருமை விளங்கும் இவர்களுக்கு வேண்டுவன கொடுத்து அவர்களை அன்பாக ஆதரித்து வந்தார்.


கலியாணம்

அந்த ஜமீன்தாரின் கிராம விசாரணை உத்தியோகத்திலிருந்து திருக்குன்னம் ஜாமொவய்யர் குமாரி ஞானம்பாளை ராமசாமி பாரதிக்கும், திருதிமலை சுப்பய்யர் குமாரி ஜானகியை வைத்தியநாத பாரதிக்கும் விவாகம் செய்துவைத்த பின் இவர்கள் சிலவருடங்கள் அங்கிருந்தார்கள். ஜானகிக்கு(பென்காநியாக) ஸ்ரீதனமாக ஒரு மனையும் சிறிது நிலமும் கிடைத்தமையால் இவர்கள் சாத்தனூரில் வந்து குடியேறினார்கள்.


சாத்தனூர்


இப்பெயருடைய கிராமங்கள் தஞ்சை ஜில்லாவில் அநேகமுள்ளன. இது காவேரிக்கரையின் வடக்கில் பூலோக கைலாசமென விளங்கும் திருவயாற்றிற்கும், திருநித்தானத்திர்க்கும்(தில்லைத் தானம்) மேற்கு நான்கு மைல் தூரம்.

மரூர் கிராமத்திற்கு அடுத்து சாத்தனூர் இவ்வூரில் வேளாளர்கள் மிகுதி , நாலாவது வகுப்பினரில் பல பட்டப் பெர்யர்கள் உள்ளன அவை 

சோழர்கள், 
மழவர்கள் , 
தஞ்சிராயர், 
வாண்டையார், 
ராசாளியர் மற்றும் தேங்க்கொண்டார் 

என்பனவாம். இவ்வகுப்பில் காலாட்டிசோழகர் ஒருவர் அவ்வூரில் பெரிய மிராசுதார் (நாட்டாமைக்காரர்) இவர் தெய்வ பக்தி அந்தணர் நேயம் அடைந்தவர். தமிழருமையையும் அறிந்தவர் , தரும சிந்தையும் தயையும் நிரம்ப உடையவர்.

ராமசாமி பாரதிக்கு 60 வயதுக்கு மேல் ஆகியும் சந்ததியில்லை . அவர் அறுபதாம் ஆண்டில் சஷ்டியப்த பூர்த்தியும் செய்து வைத்தனர் , தம்பி வைத்யநாத பாரதிக்கு இரண்டு பிள்ளைகளும் முன்று பெண்களும் இருந்தார்கள்.

இவருடைய மூத்த குமாரன் பரசுராம பாரதி( இவருக்கு எல்லைப்ப பாரதி என்று மறு பெயரும் உண்டு) இவருக்கு சொற்ப சங்கீத ஞானமும் தமிழ் சம்ஸ்க்ருத பயிற்ச்சியும் இருந்தன . இக்குடும்பத்தினருக்கு அக்காலத்தில் சங்கீதத்திற்கு ஆதாரமாக இருந்தது ஸ்ரீ ராமநாடக பதமே , இது குடும்பத்தினருக்கு முழுவதும் நன்றாகவே தெரியும். இத்துடன் வடமொழியில் ஸ்ரீ மகாபாகவதத்திலுள்ள கோபிகா கீதம்(கீதகோவிந்தம்) ஜெயதேவர் அஷ்டபதி , சதாசிவ பிரமேந்திர பதம் தீர்த்த நாராயண தரங்கம் முதலியன இவைகளை தம் வீட்டில் நித்தியம் பஜனை செய்வதுடன் மற்றவர்களுக்கும் கற்பித்து வருவார்கள். உடையார் பாளயத்திலும் சிலமாதம் இருந்து வந்ததுண்டு.


தொடரும்.....................   தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment