Sunday, September 16, 2012

பால் குழக்கட்டை

பால் குழக்கட்டை


பண்டிகை என்றாலே தின்பண்டங்களுக்கு குறைவில்லை
வரப்போகும் பிள்ளையார் சதுர்த்திக்கு நாம் பலவகையான
குழக்கட்டை விநாயகருக்கு படைத்து  மகிழ்ந்து நாமும்
சுவைத்து மகிழ்வோம் .

இந்த முறை நாம் பால்கொழுக்கட்டை செய்வதை அறிந்து
அதையும் சேர்த்து படைத்து , உண்டு மகிழ்வோமா


இதற்க்கு தேவையான பொருட்களை பட்டியலிடுவதை விட
பக்குவமாக சொல்கின்றேன் , புரிந்து கொண்டு செய்து பாருங்கள்

கொழக்கட்டைக்கு மாவு எப்படி செய்வது என்று முன்னமே
கூறியுள்ளேன் , அதே முறையில் மாவு தயார் செய்து , அதை
உருண்டையாக உருட்டி (கோலி குண்டு அளவில்).தயார் செய்து
கொள்ளுங்கள்.




1) வெல்லம் சுத்தம் செய்து கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்
2) கொஞ்சம் தேங்காய் பால் தயார் செய்து கொள்ளுங்கள் ,

அடுப்பில் ஒரு கெட்டியான பாத்திரத்தில் கொஞ்சம் பால் விட்டு




அதனுடன் தேங்காய் பால் சேர்த்து அதில் உருட்டி வைத்த கொழக்கட்டை
உருண்டைகளை போட்டு கொதிக்க விடுங்கள் ,



சிறிது நேரம் பொருத்து  வெல்லம் கரைத்த நீரை அதனுடன்
சேருங்கள் , மீண்டும் நன்றாக கொதிக்கட்டும் , இப்பொழுது  பால்
தேங்காய் பால், வெல்லம்  சேர்ந்த கலவை இறுகி கெட்டியாக வரும் .

அடுப்பில் இருந்து இறக்கி , ஏலக்காய் பொ டி செய்து
போடுங்கள், முந்திரி பருப்பு வறுத்து போடுங்கள்



கொஞ்சம் சூடு ஆறியதும்  , சின்ன கப்ல விட்டு , அதுல ஒரு
ஸ்பூன் போட்டு , அப்டி , கொஞ்சம் கொஞ்சமா நுனி நாக்கில்
வைத்து உறிஞ்சி சுவைங்க , என்னங்க , இப்பவே உமிழ் நீர்
சுரக்க துவங்கியதா

இன்னும் ரெண்டு நாள் தான் , சுவைத்திடலாம்  சூடான
சுகமான பால் கொழக்கட்டை , குடும்பத்துடன்


"பாலு விக்கற பாலம்மா , உனக்கு பால் கொழக்கட்டை வேணுமா "


No comments:

Post a Comment