Sunday, September 30, 2012

மன பலம் கிடைக்கும்!

மன பலம் கிடைக்கும்!




இரணியனைக் கொன்ற பிறகு கோபத்தோடு அமர்ந்திருந்த நரசிம்மரிடம் நெருங்க பிரகலாதனே பயந்தான். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, பெருமாளின் தங்கையான அன்னபூரணியை அதாவது பார்வதி தேவியை நரசிம்மரிடம் அனுப்பினார் ஈசன். தங்கையைப் பார்த்த நரசிம்மரின் கோபம் தணிந்தது. அதன்பின் இருவரும் அருகருகே அமர்ந்து கோயில் கொண்டனர். நரசிம்மர் சாஸ்தாவாக இருக்க, அவருக்கு அருகே அன்னபூரணி புன்சிரிப்புடன் அருள்கிறார். தூத்துக்குடி மாவட்டம், அங்கமங்கலத்தில் உள்ளது இந்த ஆலயம். அகத்தியர், நரசிம்மர் சாஸ்தாவை வணங்கியதால் அவருடைய விக்ரகமும் உள்ளது. வீரபத்ரர், அய்யனார், விநாயகர் ஆகியோரும் இங்கு அருள்கிறார்கள். தீர்த்தம் சரப தீர்த்தம். ஆடி அமாவாசை, பங்குனி உத்திரம் ஆகிய தினங்களில் இங்கு சிறப்பாக விசேஷங்கள் நடக்கின்றன. பங்குனி உத்திரம் அன்று பொங்கல் வைத்து பூஜை செய்கின்றனர். அன்னதானமும் நடக்கிறது. நரசிம்ம சாஸ்தாவை வழிபட்டால் மனபலம், உடல் நலம், மக்கள் பேறு ஆகியவை கிடைக்கும். தினமும் பிரம்மமுகூர்த்த நேரமான அதிகாலை 4 முதல் 6 மணிக்குள் ஆலயம் திறக்கப்பட்டு பூஜிக்கப்படுவது சிறப்பு.

அமைவிடம்: திருநெல்வேலி - திருச்செந்தூர் தடத்தில் அங்கமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
 

No comments:

Post a Comment