பச்சை சுண்டைக்காய் மோர் குழம்பு By: Savithri Vasan
தேவை :-
நல்ல கெட்டித் தயிர்
சுண்டைக்காய் கொஞ்சம்
தேங்காய் துருவல் .......1 கப்
பச்சை மிளகாய் ...........4
ஜீரகம் .......................1 டீஸ்பூன்
அரிசி /அரிசி மாவு கொஞ்சம்
சுண்டைக்காய் கொஞ்சம் நசுக்கி பிளந்து
வைத்துக்கொள்ளவும்.
தயிர் கெட்டியாக தண்ணீர் விடாமல் கடைந்து
வைத்துக்கொள்ளவும்.
தேங்காய் துருவல் , பச்சை மிளகாய் , ஜீரகம் , அரிசி/அரிசிமாவு
சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்
கடைந்து வைத்த தயிரை ஒரு பாத்திரத்தில் விட்டு
அடுப்பில் வைக்கவும் அரைத்த விழுதை அதனுடன்
சேர்த்து கிளறாமல் பொங்கி வந்ததும் அடுப்பை
அணைக்கவும்.
பச்சை சுண்டைக்காயை வதக்கி போடவும்
கடுகு தாளிக்கவும் , கருவேப்பிலை சேர்க்கவும்
(தேவைப்பட்டால் தாளிப்புக்கு தேங்காய் எண்ணை
உபயோகப்படுத்தலாம்)
சிலர் மஞ்சள் பொடி சேர்த்து , மஞ்ச மோர் குழம்பு
செய்வார்கள்.
இதில் காய்களாக
பூசணிக்காய் ,
கரட்,
வெண்டைக்காய்
சுண்டைக்காய் வற்றல்,
சேப்பங்கிழங்கு,
முருங்கைக்காய்
என பலவாறு விருப்பம் போல் சேர்க்கலாம்.
ஆனா மோர் குழம்பு செய்யும் விதம் இதுதான்
அப்டின்னு ஐ எஸ் ஐ முத்திரை குத்தி சொல்லலாம்.
சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்
அது பழமொழிங்க................. ஆனா நாம செய்யப்போறது
பச்சை சுண்டைக்காய் மோர் குழம்பு , இதுக்கு கூலி
குடுக்க வேணாம்
No comments:
Post a Comment