தினசரி தியானம்
புதுப்பித்தல்
பெரியபொருளே, உன்னைப் போற்று மளவு என்னை நான் பண்புடையவனாகப் புதுப்பித்துக் கொள்கிறேன்.
இயற்கையானது ஓயாது தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. ஆதலால் அது என்றும் புத்தம் புதியது. எண்ணத்திலும் வாழ்விலும் மனிதன் தன்னை மேலோனாகப் புதுப்பிக்கக் கடமைப்பட்டிருக்கிறான்.
சிந்திக்குந் தோறும்
தெவிட்டா அமுதே என்
புந்திக்குள் நீதான்
பொருந்திடவுங் காண்பேனோ?
-தாயுமானவர்
No comments:
Post a Comment