Tuesday, September 25, 2012

பசி தீர்த்த பரமசிவன்



பசி தீர்த்த பரமசிவன்

அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை
கடைய முடிவு செய்தனர். இதற்காக  மந்தார மலையை மத்தாக்கி வாசுகி
என்ற பாம்பைக் கயிராக்கி  பாற்கடலை கடைந்து கொண்டிருந்த நேரத்தில்
மனதார மலையானது ஒரு பக்கமாக சரிந்து மூழ்க தொடங்கியது.
அந்த மலை கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை(கச்சபம்) வடிவம்
கொண்டு மந்தார மழையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார்

திருமால் வணங்கிய சிவன்

திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின்  கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெறுவதற்காக சிவபெருமானை வழிபட்டுள்ளார் ஆமை  வடிவத்தில் மகாவிஷ்ணு சிவபெருமானை வழிபட்ட காரணத்தால் அந்த சிவதலம் அமைந்த வூர் திருகச்சூர் என்ற பெயர் பெற்றது. இந்த தலம்
ஆதி கச்சபேஸம் என்றும் அழைக்கப்படுகிறது . இங்குள்ள கூர்ம(ஆமை)
தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால்
அனைத்து  தோஷங்களும் நீங்கும்.  செல்வம் கல்வி, இன்பம் தழைத்தோங்கும்
என்று கூற்று உள்ளது.

பசி தீர்த்த பரமன்

இதே போல் மற்றொரு சிறப்பும் இந்த சிவ தலத்திற்கு பெருமை சேர்க்கும்
வகையில் உள்ளது.  சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி
பிச்சை எடுத்து வந்து அவரது பசியைப் போக்கினார் சிவபெருமான் என்ற
தல பெருமையுடன் விளங்குகிறது திருக்கச்சூர் திருத்தலம்.


ஒருமுறை திருக்கச்சூர் தலத்திற்கு வந்த சுந்தரர், கோவிலுக்குள் சென்று
சிவபெருமானை பாடல் பாடி பக்தியுடன் வழிபட்டார். பின்னர் ஆலயத்தின் வெளியே வந்தார் அப்போது வெகு தொலைவில் இருந்து திருகச்சூருக்கு வந்ததால் களைப்பு எர்ப்பட்டதுடன் பசியும் சேர்ந்து கொண்டதால் சுந்தரர் தள்ளாட்டத்துடன் கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை முடி களைப்பாறினார்.










சுந்தரரின் அந்த நிலையை கண்ட கச்சபேஸ்வரர், அந்தணர் உருவம்
கொண்டு வந்தார். பசி மயக்கத்தில் அயர்ந்து கிடந்த சுந்தரரின் தோளைத் 
தட்டி எழுப்பினார். பின்னர் அவரை உட்காரச் சொல்லி, வாழை இல்லை விரித்து அன்னம் பரிமாறியதுடன், உண்டு முடிந்ததும் குடிநீரும் வழங்கினார். அதிக பசியுடன் இருந்த சுந்தரர், அனைத்து உணவையும் உண்டு முடித்தார்.

பிச்சை எடுத்து......

'அன்னம் பல வித வண்ணங்களுடனும் , பல வகை சுவையுடனும் இருந்ததே 
என்ன காரணம் ? என்று தனது சந்தேகத்தை முன் வைத்தார். 

சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் 
சென்று பிச்சை வாங்கிவந்து உணவு கொண்டு வந்தேன்' என்று அந்த 
அந்தணர் தெரிவித்தார். 

அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே உள்ள குளத்தில் 
சென்று கைகளை கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது, அந்தணர் 
மாயமாகி இருந்தார். இறைவனே  மறந்து போயிருக்கக் கண்டார். 
அதன் பின்னர் இறைவனே தனக்கு பசி போக்க வந்ததும்  தனக்காக 
திக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சை 
எடுத்து அன்னமிட்டதை நினைத்து உருகினார் சுந்தரர். 

கோவில் அமைப்பு.......

திருக்கச்சூர் தலம் ஆலக்கோவில் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது 
இவ்வாலயத்தின் மூலவர் கச்சபேஸ்வரர் கிழக்கு திசை நோக்கி இந்த 
கோவிலுக்கு  கோபுரமில்லை.  கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் 
இருக்கிறது, இது கூர்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. திருமால் 
கூர்ம அவதாரம் எடுத்தபோது இக்குளத்தை ஏற்ப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதன் அருகில் தான் சுந்தரர் பசிக்களைப்பால் படுத்திருந்த 16 கால் 
மண்டபம் இருக்கிறது. 




கிழக்கில் உள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றதும், கிழக்கு 
வெளிப்பிரகாரத்தில் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன.
தெற்கு வெளிப்பிரகாரத்தில் 27 தூண்களை உடைய நட்சத்திர மண்டபம் 
உள்ளது.  நட்சத்திர மண்டபத்தை கடந்து உள்ளே சென்றால் தியாகராஜர் 
சன்னதி அமைந்துள்ளது. இவர் உபயவிடங்கர் எனப்படுகிறார். 
மகாவிஷ்ணுவிற்கு இத்தலத்தில் இறைவன் தனது நடனத்தைக் காட்டி 
அருளியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நட்சத்திர மண்டபத்தில் 
உள்ள ஒரு தூணில் ஆமை உருவில் மகாவிஷ்ணு சிவலிங்கத்தை 
வழிபடும் சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது.

விருந்திட்ட ஈஸ்வரர் சன்னதி.....

மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால் இறைவி 
அஞ்சனாட்சியின் சன்னதி உள்ளது.  நான்கு திருக்கரங்களுடன் நின்ற 
நிலையில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக 
அம்மன் சன்னதி ஒரு தனிக் கோவிலாகவே உள்ளது. அம்பாள் சன்னதி 
முன் உள்ள மண்டபத்தில் இருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் 
வழியாக உள்ளே சென்றால் கச்சபேஸ்வரரை தரிசனம் செய்யலாம். 
கருவறையில் கிழக்கு நோக்கிய சன்னதியில் அமர்ந்திருக்கும், திருமாலுக்கு 
அருளிய இறைவன் சுயம்பு லிங்கமாவார். கருவறை அகழி போன்ற 
அமைப்பு கொண்டது. கருவறை சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய 
நால்வர் சன்னதியைக் காணலாம் 

கருவறை சுற்றி வலம் வரும்போது வடக்குச் சுற்றின் வடகிழக்கு 
மூலையில் நடராஜர் சன்னதி அமைந்துள்ளது.. கருவறை கோஷ்ட 
மூர்த்திகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்ம தேவர் 
துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர் வடக்கு வெளிப்பிரகாரத்தில் 
கிழக்கு நோக்கிய முருகன் சன்னதியும், விருந்திட்ட ஈஸ்வரர் சன்னதியும் 
அமைந்திருக்கின்றன. விருந்திட்ட ஈஸ்வரர் சன்னதிக்கு அருகே 
வடக்கு நோக்கிய சுந்தரர் சன்னதியும் அமைந்துள்ளது. வடக்கு வெளிப் 
பிரகாரத்தில் தெற்கு நோக்கிய பைரவர் சன்னதியும் இருக்கிறது. 

பிணி தீர்க்கும் மருந்தீஸ்வரர் ....





திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோவிலின் இணை கோவிலான 
மருதீஸ்வரர் கோவில் அங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் 
மலையின் மீது மலைக்கொவிலாக அமையபெற்றுள்ளது. இந்தக் 
கோவிலில் குடிகொன்றிக்கும் இறைவன் மருந்தீஸ்வரர் என்றும் 
இறைவி இருள்நீக்கிய அம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒரே 
தலத்தில் இரு சிவன் கோவில்கள் என்பது திருக்கசூருக்கு மேலும் 
சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. 

இந்த மருந்தீஸ்வரரை  அத்தன், ஆனந்தன்,அமுதன் என்று அழைக்கின்றனர் 
பிணி தீர்க்கும் மருந்தானவன் என்பதால் மருந்தீஸ்வரர் என்ற பெயர் 
பெற்றுள்ளது. ஒருமுறை நாரதர் சொன்னபடி தேவ மருத்துவர்களான 
'அஸ்வினி தேவர்கள்' இந்த மலையில் உள்ள இறைவனையும் , 
இறைவியையும் பூஜித்து இங்கு பல அறியவகை மூலிகைகள் பெற்றதாகவும் 
அதன் மூலம் எல்லா உயிர்களின் நோயையும் போக்கியதாகவும் 
கூறப்படுகிறது. 

சிறப்பு தகவல்:- மலை மெது உள்ள மருந்தீஸ்வரர் கோவிலின் 
                                 கொடி மரத்தின் கீழ் திருநீறு போல் மண் கிடைக்கிறது 
                                  அது மருந்தாக இன்றளவும் மக்களால் உட்கொள்ளப்படுகிறது .
                                 நவபாஷான மரங்கள், மூலிகைகள் இன்றும் இந்த 
                                 மலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 


 



No comments:

Post a Comment