தினசரி தியானம்
எந்தையே , உன் சன்னதியை அணுகுமளவு உனக்கும் எனக்குமுள்ள
தொடர்பை நான் நன்கு அறிகிறேன் .
சத்பொருளாகிய பரமனை நோக்கிப் போகும் மார்க்கம் சன்மார்க்கமாம் ,
அம்மார்க்கத்திலே முன்னேற்றமடைந்து வருமளவு மனம் தெளிவடைகிறது.
தெளிந்த மனமே தெய்வத்தை தெரிந்து கொள்கிறது.
தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதார் சிவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே
No comments:
Post a Comment