நாலடியார் - (353/400)
கணமலை நன்னாட! கண்ணின் றொருவர்
குணனேயுங் கூறற்கு அரிதால்; குணன் அழுங்கக்
குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ, நா!
பொருள்:- கூட்டமான மாலைகள் நிறைந்த நல்ல நாட்டை
உடையவனே! ஒரு வருடைய நல்ல குனங்களைக்கூட
அவர் எதிரில் நின்று முக ஸ்துதியாகச் சொல்வதற்கு
நமக்கு நாக்கு வராது. ஆனால் ஒருவரின் எதிரில் நின்று
கொண்டு அவரது நல்ல குணங்கள் அழியும் வகையில்
குற்றங்களையே எடுத்துச் சொல்லுகின்ற சிற்றறிவினர்களுக்கு
அவரின் நாக்கு எந்தப் பொருளால் செய்யப்பட்டதோ?
கணமலை நன்னாட! கண்ணின் றொருவர்
குணனேயுங் கூறற்கு அரிதால்; குணன் அழுங்கக்
குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ, நா!
பொருள்:- கூட்டமான மாலைகள் நிறைந்த நல்ல நாட்டை
உடையவனே! ஒரு வருடைய நல்ல குனங்களைக்கூட
அவர் எதிரில் நின்று முக ஸ்துதியாகச் சொல்வதற்கு
நமக்கு நாக்கு வராது. ஆனால் ஒருவரின் எதிரில் நின்று
கொண்டு அவரது நல்ல குணங்கள் அழியும் வகையில்
குற்றங்களையே எடுத்துச் சொல்லுகின்ற சிற்றறிவினர்களுக்கு
அவரின் நாக்கு எந்தப் பொருளால் செய்யப்பட்டதோ?
No comments:
Post a Comment