நாலடியார் -- (348/400)
-----------------------------
இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும்; -- அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம்; விறன்மலை நன்னாட!
ஏகுமாம்; எள்ளுமாம்; கீழ்.
பொருள்:- ஆற்றல், பெருமை பொருந்திய மலைகளை உடைய
நல்ல நாட்டை உடைய மன்னனே! கீழ்மக்கள், கடுமையாகப்
பேசுவதில் வல்லவர்; கண்ணோட்டம்(இரக்கம் ) இல்லாதவர்;
மற்றவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சி அடைவர்; அடிக்கடி
கோபம் கொள்வர்; தாம் எண்ணிய, கண்ட, கண்ட இடங்களுக்குச்
செல்வர்; பிறரை இகழ்வர். இவையெல்லாம் அவரது குணங்கள்
ஆகும்.
No comments:
Post a Comment