Monday, January 6, 2014

தினம் ஒரு திருப்புகழ் - திருவடியைப் பெற



தினம் ஒரு திருப்புகழ் - திருவடியைப் பெற - நாள் - 50




ராகம் :கேதார கௌளம்    .....................               தாளம்: ஆதி (திச்ரம்)




கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய ...... திரிசூலன்

கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி ...... யெழுகாலந்

திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவி ...... யணுகாதே

செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் ...... தரவேணும்

பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு ...... முருகோனே

பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழநி ...... யமர்வோனே

அரியு மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை ...... யெறிவோனே

அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய ...... பெருமாளே.


 கருத்துரை: இமவானுடைய புதல்வி பார்வதியை மணந்த சிவபெருமான்
பெற்ற முருகக் கடவுளே பழனியம்பதியில் வீற்றிருப்பவரே! கிரௌஞ்ச
மலை பிளக்குமாறு வேலாயுதத்தை விடுத்தவரே பெருமிதமுடையவரே!
கருமை நிறத்துடன் கூடிய எருமை மீது ஏறி சூலத்தை ஏந்திய இயமன்
இருக்கப் பிடிக்கின்ற பாசக்கயிற்றுடன் உயிர்கள் நீங்கும்படி வேகமாக
வரும்பொழுது திரியும், நரியும், நெருப்பும் உரிமையை காட்டி நெருங்கி
வராதபடி நிறைவும், அறிவும், உறவும் உடைய உமது பாதமலரை
தந்தருள்வீர்

தொடரும் திருப்புகழ் ...................................தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment