தினசரி தியானம்
சுயேச்சையின் பாகுபாடு
என்னுயிர் நாயகா, உன்னை நான் நாடுகையில் எனது சுயேச்சை கற்புடையதாகிறது. உன்னையல்லாது வேறு பொருளை நாடுகையில் அது கற்பிழந்து விடுகிறது.
கீழ்மையில் செல்லும் சுயேச்சை விலங்குத் தன்மையது. இடைநிலையில் திரியும் சுயேச்சை மக்கள் - தன்மையது. மேன்மையில் மிளிரும் சுயேச்சை தெய்வத் தன்மையது. நெஞ்சே, நீ நாடுவது பெரிய பொருளானால் உனக்கு உண்மையான சுயேச்சை வந்து விட்டதென்று தெரிந்து கொள்.
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி.
-அப்பர்
No comments:
Post a Comment