Friday, October 19, 2012

சகித்தல்



தினசரி தியானம்



சகித்தல்



பரிபூரணானந்தமே, உன்னில் நான் திளைத்திருக்குங்கால் உலக வாழ்வு உண்டு பண்ணும் துன்பத்தைச் சகிக்கும் திறன் தானே வந்துவிடுகிறது.


மண்ணுலகில் பிறப்பெடுத்திருப்பவர்களுக்குத் துன்பத்துக்குமேல் துன்பம் வந்து கொண்டேயிருக்கும். அவைகளைப் பொறுத்துக்கொள்ளுமளவு மனம் உறுதி பெறுகிறது. துன்பத்தில் தளர்வுறுமளவு மன வலிவு குறைகிறது. உறுதியான உள்ளம் படைத்துத் துன்பத்தைப் பொருள்படுத்தாதிருப்பது திதிக்ஷை.


காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங்கு இல்லை உயிர்க்கு.
-திருக்குறள்

No comments:

Post a Comment