Sunday, October 14, 2012

வியாகூலம்





தினசரி தியானம்


வியாகூலம்


கருணைக் கடலே, உன்னை நான் அணுகவில்லையே என்ற வியாகூலம் என் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருக்குமாக.

பணம், போகம், பதவி, புகழ் ஆகியவைகளைப் பற்றி அல்லும் பகலும் மனிதன் வியாகூலப்படுகிறான். அதிவிரைவில் அவை யாவும் மறைந்து போகக் கூடியவைகள் என்பதை அவன் எண்ணிப் பார்ப்பதில்லை. அதே வியாகூலத்தைக் கடவுளின் பொருட்டு அவன் அடைவானாகில் அது நித்தியானந்தத்துக்கு வழிகாட்டிவிடும்.


தாகமறிந்து இன்பநிட்டை
தாராயேல் ஆகெடுவேன்
தேகம் விழுந்திடின் என்
செய்வேன் பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment