Monday, October 22, 2012

பத்மாவதி தாயாரின் அபிஷேக சேவைக்கு தங்க பீடம்!

பத்மாவதி தாயாரின் அபிஷேக சேவைக்கு தங்க பீடம்!


திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் அபிஷேக சேவைக்காக, திருப்பதி தேவஸ்தானம், தங்க பீடத்தை தயாரித்துள்ளது. இந்த பீடம், 40 லட்சம் ரூபாய் செலவில், 1.5 கிலோ தங்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவிலில் தாயாருக்கு அபிஷேகம் செய்யும் போது, இது, பயன்படுத்தப்படும். பீடத்தை, தேவஸ்தான அதிகாரிகள், நேற்று முன்தினம், திருச்சானூர் கோவில் துணை நிர்வாக அதிகாரி கோபால கிருஷ்ணாவிடம் வழங்கினர். தாயாரின் அபிஷேக சேவைக்கு, ஏற்கனவே ஒரு தங்க பீடம் உள்ளது; இப்போது கூடுதலாக, மற்றொரு தங்க பீடம் தயார் செய்யப்பட்டுள்ளது. நவராத்திரி உற்சவ விழா மற்றும் வார வெள்ளிக் கிழமையை ஒட்டி, நேற்று, திருச்சானூர் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பத்மாவதி தாயாரை தரிசித்தனர்.

No comments:

Post a Comment