Wednesday, September 12, 2012

அக்னியை இந்துக்கள் வணங்குகிறார்கள்


அக்னியை இந்துக்கள் வணங்குகிறார்கள் ஏன் தெரியுமா?



இந்துக்களின் வழிபாட்டில் அக்னி ஒரு முக்கிய இடம் வகுக்கிறது.  அக்னி மிகச் சுத்தமானது. மிக உக்கிரமானது. 

இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம். அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது 
என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும். அதேநேரம் குற்றங்கள் புரியாத குற்றங்களிலிருந்து வெகுதூரம் தள்ளி இருக்கின்ற பரிசுத்தம் இருக்க வேண்டும். 

இந்த குணங்களைக் கொண்ட  அக்னியை  வணங்குவது முன்னோர் வகுத்த வழி. அதுமட்டுமல்ல,  அக்னி  இடையறாது சலனமுள்ளது. ஆனால் சலனம் இல்லாதது போலத் தோன்றும். உற்று அந்த சலனத்தைக் கவனித்தால் அந்த ஆட்டத்தைப் பார்க்க நம்முடைய மனதிற்குள் உள்ள ஆட்டம் மெல்ல மெல்ல அடங்கும்.  அக்னியை   முன் வைத்து தியானிப்பது,  அக்னியை   வளர்த்து அதனுள் மனதைச் செலுத்துவது என்பது மனதை கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அழகான பயிற்சி.  

அக்னி  என்பது ஹோமகுண்டமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குத்துவிளக்கின் முத்துச்சுடர் கூட உங்கள் மனதை ஒருமுகப்படுத்திவிடும். எனக்குப் பிடித்தது எல்லாவற்றையும்  அக்னியில்  போட்டு விடுகிறேன். எனக்குப் பிடித்தது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என்று வழிபட்டால் போதும்.  அக்னி  மிக எளிதாக மனதை ஒன்ற வைக்கும் சாதனம்.

No comments:

Post a Comment