தினசரி தியானம்
மந்திரம்
மாண்பொருளே, உன்னை நினைவூட்டும் எண்ணம் ஒவ்வொன்றும் மந்திரமாகிறது.
எண்ணத்தால் மனம் உறுதி பெறுகிறது. அல்லது தளர்வுறுகிறது. உறுதிப்படுத்தும் எண்ணம் ஒவ்வொன்றும் மந்திரமாகிறது. மந்திரங்கள் எண்ணிக்கையில் அடங்காதவைகள். அவைகளுள் ஒன்றை இறுதியில் உறுதியாய்ப் பிடித்துக் கொண்டால் போதுமானது. மந்திரமே ஈசன் வடிவம்.
மந்திரங்க ளெல்லாம் மயங்காமல் உள்நினைந்து
முந்து அரனை அர்ச்சிக்கும் ஆறு
-ஔவைக் குறள்
மந்திரமாவது நீறு , மதிக்கப்படுவது நீறு
No comments:
Post a Comment