Thursday, September 6, 2012

கிருஷ்ண ஜெயந்தி


நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில் நாளை கிருஷ்ண ஜெயந்தி துவக்கம்!






மாமல்லபுரம் ஸ்ரீநவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில், நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா துவங்குகிறது.மாமல்லபுரத்தில் ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ணசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா, நாளை துவங்கி 18 ம் தேதி நிறைவு பெறுகிறது.நாளை மாலை 4.30 மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, அவர் ஆயர்பாடிக்கு எழுந்தருளும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். தினமும் மாலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறும். எட்டாம் தேதி ஆலிலை கண்ணன், ஒன்பதாம் தேதி வெண்ணைத்தாழி கண்ணன், 10ம் தேதி கோவர்த்தனகிரி, 11ம் தேதி சகடாசூர வதம், 12ம் தேதி கோபாலக்கண்ணன், 13ம் தேதி ஏணிக்கண்ணன், 14ம் தேதி காளிங்க நர்த்தனம், 15ம் தேதி ஊஞ்சல் கண்ணன், 16ம் தேதி ஸ்ரீ கிருஷ்ண லீலை, 17ம் தேதி குழலூதும் கண்ணன், ஆகிய திருக்கோலங்களில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தினமும் இரவு 7 மணிக்கு ரகுவீர பட்டாச்சாரியாரின் உபன்யாசம் நடைபெறும். நிறைவு நாளான 18 ம் தேதி காலை 10.30 மணிக்கு திருமஞ்சனம், மாலை 4.30 மணிக்கு வீதியுலா, 5.30 மணிக்கு உறியடி விழா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி பக்த பஜனை சபா குழு செய்துள்ளது.

No comments:

Post a Comment