கோதுமை (மாவு) குழிப்பணியாரம்
இது ஒரு புது வகையான அண்மையில் எனக்கு அறிமுகம் ஆன
செய்முறை , உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை
கொள்கின்றேன்
பொதுவாக அரிசிமாவும் , உளுந்துமாவும் கலந்த கலவையில்
தான் குழிப்பணியாரம் செய்வது வழக்கம் ஆனால் என் நண்பர்
வீட்டுக்கு சென்ற பொழுது பணியாரம் சாப்பிடுகிறீர்களா
என்று கேட்டார் , நான் வேண்டாம் இன்று காலையில் தான்
எங்க வீட்ல செஞ்சு சாப்டேன் என்று மறுத்தேன்
உடனே சமையல் அறையில் இருந்த அவர் மனைவி
சாவித்திரி இது மாதிரி செஞ்சு இருக்க மாட்டா நீங்க
சப்டுங்கன்னு சொல்லி 4 பணியாறம் என் முன் வைத்தார்
வாயில் முதலில் ஒரு துண்டை போட்டதும் (சற்று சூடாக
இருந்தபோதும்)வேகமாக அடுத்த வாய் சாப்பிட ஆவல்
தந்தது அதன் சுவை.
பாருங்களேன் என்னன்னு
பட்டாணி , உருளைக்கிழங்கு நன்றாக வேகவையுங்க
உருளைக்கிழங்கு தோல் உரித்து , வெங்காயம் பட்டாணி
காரப்பொடி சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி
வைங்க , கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
உப்பு போட்டு கரைத்த கோதுமை மாவில் உருட்டி வைத்துள்ள
உருண்டைகளை தோய்த்து பணியார கல் குழிகளில் போட்டு
திருப்பி திருப்பி விட்டு சிவந்து வந்ததும் வெளியே எடுக்கவும்
பாருங்களேன் பொன்னிறமாக எப்படி ஜொலிக்குதுன்னு.
,
கிளம்பும் பொது கேட்டேன் , வீட்ல அவளுக்கும் கொஞ்சம்
தரேளான்னு , தந்தாங்க , அதுதாங்க மேல தட்ல இருக்கறது
என்ன நாளைக்கு நம்ம வீட்ல செஞ்சுடலாமா ?,
இது ஒரு புது வகையான அண்மையில் எனக்கு அறிமுகம் ஆன
செய்முறை , உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை
கொள்கின்றேன்
பொதுவாக அரிசிமாவும் , உளுந்துமாவும் கலந்த கலவையில்
தான் குழிப்பணியாரம் செய்வது வழக்கம் ஆனால் என் நண்பர்
வீட்டுக்கு சென்ற பொழுது பணியாரம் சாப்பிடுகிறீர்களா
என்று கேட்டார் , நான் வேண்டாம் இன்று காலையில் தான்
எங்க வீட்ல செஞ்சு சாப்டேன் என்று மறுத்தேன்
உடனே சமையல் அறையில் இருந்த அவர் மனைவி
சாவித்திரி இது மாதிரி செஞ்சு இருக்க மாட்டா நீங்க
சப்டுங்கன்னு சொல்லி 4 பணியாறம் என் முன் வைத்தார்
வாயில் முதலில் ஒரு துண்டை போட்டதும் (சற்று சூடாக
இருந்தபோதும்)வேகமாக அடுத்த வாய் சாப்பிட ஆவல்
தந்தது அதன் சுவை.
பாருங்களேன் என்னன்னு
பட்டாணி , உருளைக்கிழங்கு நன்றாக வேகவையுங்க
உருளைக்கிழங்கு தோல் உரித்து , வெங்காயம் பட்டாணி
காரப்பொடி சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி
வைங்க , கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
உப்பு போட்டு கரைத்த கோதுமை மாவில் உருட்டி வைத்துள்ள
உருண்டைகளை தோய்த்து பணியார கல் குழிகளில் போட்டு
திருப்பி திருப்பி விட்டு சிவந்து வந்ததும் வெளியே எடுக்கவும்
பாருங்களேன் பொன்னிறமாக எப்படி ஜொலிக்குதுன்னு.
,
கிளம்பும் பொது கேட்டேன் , வீட்ல அவளுக்கும் கொஞ்சம்
தரேளான்னு , தந்தாங்க , அதுதாங்க மேல தட்ல இருக்கறது
என்ன நாளைக்கு நம்ம வீட்ல செஞ்சுடலாமா ?,
No comments:
Post a Comment