Wednesday, September 12, 2012

எண் '9' சிறப்பு தெரியுமா?



                                                          9ன் சிறப்பு தெரியுமா?



எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கள், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள். பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்! பரத கண்டத்தில், நம் இந்தியாவில் ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.

நவ சக்திகள் 
வாமை, 
ஜேஷ்டை, 
ரவுத்ரி, 
காளி, 
கலவிகரணி, 
பலவிகரணி, 
பலப்பிரமதனி, 
சர்வபூததமனி, 
மனோன்மணி

நவ தீர்த்தங்கள்: 

கங்கை, 
யமுனை, 
சரஸ்வதி, 
கோதாவரி, 
சரயு, நர்மதை, 
காவிரி, 
பாலாறு, 
குமரி


நவ வீரர்கள்

வீரவாகுதேவர், 
வீரகேசரி, 
வீரமகேந்திரன், 
வீரமகேசன், 
வீரபுரந்திரன், 
வீரராக்ஷசன், 
வீரமார்த்தாண்டன், 
வீரராந்தகன், 
வீரதீரன்

நவ அபிஷேகங்கள்:

 மஞ்சள், 
பஞ்சாமிர்தம், 
பால், 
நெய், 
தேன், 
தயிர், 
சர்க்கரை, 
சந்தனம், 
விபூதி.

நவ ரசம்: 

இன்பம், 
நகை, 
கருணை, 
கோபம், 
வீரம், 
பயம், 
அருவருப்பு, 
அற்புதம், 
சாந்தம் 
ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள்

சூரியன், 
சந்திரன், 
செவ்வாய், 
புதன், 
குரு, 
சுக்கிரன், 
சனி, 
ராகு, 
கேது

நவமணிகள் - 

கோமேதகம், 
நீலம், வைரம், 
பவளம், 
புட்பராகம், 
மரகதம், 
மாணிக்கம், 
முத்து, 
வைடூரியம்

நவ திரவியங்கள் - 

பிருதிவி, 
அப்பு, 
தேயு, 
வாயு, 
ஆகாயம், 
காலம், 
திக்கு, 
ஆன்மா, 
மனம்

நவலோகம் (தாது):

பொன், 
வெள்ளி, 
செம்பு, 
பித்தளை, 
ஈயம், 
வெண்கலம், 
இரும்பு, 
தரா, 
துத்தநாகம்

நவ தானியங்கள் -

நெல், 
கோதுமை, 
பாசிப்பயறு, 
துவரை, 
மொச்சை, 
எள், 
கொள்ளு, 
உளுந்து, 
வேர்க்கடலை


சிவ விரதங்கள் ஒன்பது: 

சோமவார விரதம், 
திருவாதிரை விரதம்,
 உமாகேச்வர விரதம், 
வராத்ரி விரதம், 
பிரதோஷ விரதம், 
கேதார விரதம், 
ரிஷப விரதம், 
கல்யாணசுந்தர விரதம், 
சூல விரதம்


நவசந்தி தாளங்கள் - 
அரிதாளம், 
அருமதாளம், 
சமதாளம், 
சயதாளம், 
சித்திரதாளம், 
துருவதாளம், 
நிவர்த்திதாளம், 
படிமதாளம், 
விடதாளம்

அடியார்களின் பண்புகள்: 

எதிர்கொள்ளல், 
பணிதல், 
ஆசனம் (இருக்கை) தருதல், 
கால் கழுவுதல், 
அருச்சித்தல், 
தூபம் இடல், 
தீபம் சாட்டல், 
புகழ்தல், 
அமுது அளித்தல்

நவரத்னங்கள் - 
தன்வந்த்ரி, 
க்ஷணபகர், 
அமரஸிம்ஹர், 
சங்கு, 
வேதாலபட்டர், 
கடகர்ப்பரர், 
காளிதாசர், 
வராகமிஹிரர், 
வரருசி (விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)


அடியார்களின் நவகுணங்கள்: 
அன்பு, 
இனிமை, 
உண்மை, 
நன்மை, 
மென்மை, 
சிந்தனை, 
காலம், 
சபை, 
மவுனம்.

நவ நிதிகள்  
சங்கம், 
பதுமம், 
மகாபதுமம், 
மகரம், 
கச்சபம், 
முகுந்தம், 
குந்தம், 
நீலம், 
வரம்

நவ குண்டங்கள்:

யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பது வகையிலான யாக குண்ட அமைப்புக்கள்:
சதுரம், 
யோனி, 
அர்த்த சந்திரன், 
திரிகோணம், 
விருத்தம் (வட்டம்), 
அறுகோணம், 
பத்மம், 
எண்கோணம், 
பிரதான விருத்தம்.

நவவித பக்தி : 

சிரவணம், 
கீர்த்தனம், 
ஸ்மரணம், 
பாத சேவனம், 
அர்ச்சனம், 
வந்தனம், 
தாஸ்யம், 
சக்கியம், 
ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள்

குமார பிரம்மன், 
அர்க்க பிரம்மன், 
வீர பிரம்மன், 
பால பிரம்மன், 
சுவர்க்க பிரம்மன், 
கருட பிரம்மன், 
விஸ்வ பிரம்மன், 
பத்ம பிரம்மன், 
தராக பிரம்மன்


நவக்கிரக தலங்கள் - 

சூரியனார் கோயிவில், 
திங்களூர், 
வைத்தீஸ்வரன் கோவில், 
திருவெண்காடு, 
ஆலங்குடி, 
கஞ்சனூர், 
திருநள்ளாறு, 
திருநாகேஸ்வரம், 
கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் 
வீரம், 
பூரம், 
ரசம், 
ஜாதிலிங்கம், 
கண்டகம், 
கவுரி பாஷாணம், 
வெள்ளை பாஷாணம், 
ம்ருதர்சிங், 
சிலாஷத்

நவதுர்க்கா 
ஸித்திதத்ரி, 
கஷ்முந்தா, 
பிரம்மாச்சாரினி, 
ஷைலபுத்ரி, 
மகா கவுரி, 
சந்திரகாந்தா, 
ஸ்கந்தமாதா, 
மகிஷாசுரமர்த்தினி, 
காளராத்ரி

நவ சக்கரங்கள் - 

த்ரைலோக்ய மோகன சக்கரம், 
சர்வசாபுரக சக்கரம், 
சர்வ சம்மோகன சக்கரம், 
சர்வ சவுபாக்ய சக்கரம், 
சர்வார்த்த சாதக சக்கரம், 
சர்வ ரக்ஷõகர சக்கரம், 
சர்வ ரோஹ ஹர சக்கரம், 
சர்வ ஸித்தி ப்ரத சக்கரம், 
சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள் -
ஆதிநாதர், 
உதய நாதர், 
சத்ய நாதர், 
சந்தோஷ நாதர், 
ஆச்சாள் அசாம்பயநாதர், 
கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், 
சித்த சொவ்றங்கி நாதர், 
மச்சேந்திர நாதர், 
குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள் : 

இரண்டு கண்கள், 
இரண்டு காதுகள், 
இரண்டு மூக்குத் துவாரங்கள், 
ஒரு வாய், 
இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள் : 

தோல், ரத்தம், 
மாமிசம், 
மேதஸ், 
எலும்பு, 
மஜ்ஜை, 
சுக்கிலம், 
தேஜஸ், 
ரோமம்

18 புராணங்கள், 18 படிகள் என அனைத்தும் 9-ன் மூலமாக தான் உள்ளன.

 காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். 

எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்! 

புத்த மதத்தினர் 108 முறை மணியடித்து, புது வருடத்தை வரவேற்றுக் கொண்டாடுகின்றனர். 

சீனாவில், 36 மணிகளை மூன்று பிரிவாகக் கொண்டு, சு ஸூ எனப்படும் மாலையைக் கொண்டு ஜபம் செய்வார்கள். 

ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்! 

மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான்.

 9 என்ற எண்ணை கேலிக்கையாக எண்ணாமல் புராணங்களிலும், நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை போற்றுவோம்.

"எட்டு எட்டா வாழ்க்கைய நீ பிரிச்சுக்கோ ......"
ஆனா அனா எல்லாமே ஒன்பதில் தான் அடக்கம் நீ புரிஞ்சுக்கோ



1 comment:

  1. 9 கணிதத்திலும் ஒரு தனித்துவமான எண். எந்த ஒரு எண்ணையும் 9 ஆல் பெருக்கினால், அதனால் கிடைக்கும் முழுத்தொகையிலன் தனி எண்களைக் கூட்டினால் 9 மட்டுமே வரும். உதாரணம்: 2 x 9=18, 1+8=9, 246x318=78228, 7+8+2+2+8=27, 2+7=9. ஹிந்துக்களின் புனித எண்: 108, 1+0+8=9. வாசனின் சிறப்பான மற்றும் நுணுக்கமான தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete