காசிவிசுவநாதர் கோயிலில் 108 கோமாதா பூஜை வழிபாடு
தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் நடந்த 108 கோமாத பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
குற்றாலம் ஐந்தருவி சுவாமி விவேகானந்த ஆசிரமத்தின் வெள்ளி விழா, சாரதா ஆசிரமத்தின் 15வது ஆண்டு நிறைவு விழா, சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழா ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் 108 கோமாதா பூஜை வழிபாடு நடந்தது. அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கின. தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பசுக்கள் வேன்களில் கொண்டு வரப்பட்டன.
பசு கன்றுகள் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. "ஓம் சக்தி கோமாதா போற்றி போற்றி...என்று துவங்கி கோமாதா வடிவான நாராயணியே போற்றி போற்றி போற்றி ஓம்! என 108 போற்றிகள் கூறப்பட்டு வழிபாடு நடந்தது.
கோமாதா எங்கள் குலமாதா , குலமாதர் நலம் காக்கும் ...........
No comments:
Post a Comment