Tuesday, January 1, 2013
அன்பு
தினசரி தியானம்
அன்பு
அன்புக் களஞ்சியமே! என்னை நீ அன்பில் தோய்த்து அன்புமயம் ஆக்கி விடாயோ? அன்பில்லாது நான் எங்ஙனம் உயிர் வாழ்வேன்? உன்னிடத்திருந்தல்லாது அன்பை நாடி நான் வேறு எங்குச் செல்வேன்?
வாழ்வை இனியதாக்குவது அன்பு. கஷ்டங்களையெல்லாம் மீளச்செய்வது அன்பு. குடும்பவாழ்க்கையை மேன்மைப்படுத்துவது அன்பு. உலக வாழ்க்கையைச் சுவைக்கச் செய்வது அன்பு. அழகற்றதற்கு அழகூட்டுவது அன்பு. அன்பு பொலியுமிடம் சுவர்க்கம்; அன்பு மறைந்தவிடம் நரகம். மனமே, நீ அன்பில் ஊறி வளர்க.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
-திருமந்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment