தினசரி தியானம்
நல்வழி
நான் நல்வழியில் நட்ந்தால் இறைவா, உன்னையன்றி வேறு எங்கே போகமுடியும்?
அரசனது ஆதரவு நல்வழியின் ஆதரவுக்கு நிகராகாது. செல்வத்தின் ஆதிக்கம் நல்வழியின் ஆதிக்கத்துக்கு ஈடாகாது. ஆயுதத்தின் வல்லமை நல்வழியின் வல்லமைக்கு ஒப்பாகாது. நண்பனது நட்பு நல்வழியின் நட்புக்கு சமனாகாது. நல்வழி ஒன்றே மனிதனுக்கு யாண்டும் பெருந்துணையாகிறது.
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
-திருக்குறள்
No comments:
Post a Comment